Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் தென் மாவட்டத்திற்கு நிவாரண பொருட்கள்

டிசம்பர் 21, 2023 02:09

நாமக்கல்: தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இணைப்பு சங்கமான வெண்ணந்தூர் வட்டார அனைத்து வணிகர் சங்கத்தின் சார்பில் ரூபாய் 4 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

அவற்றில் ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் மற்றும் வெண்ணந்தூர் வட்டார அனைத்து வணிகர் சங்கத்தின் தலைவர் P.R.K.சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் நேற்று (20/12/2023) நாமக்கல் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.

மேலும் ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் பேரமைப்பின் தலைமை வழியே நேரடியாக திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்க மாவட்ட பேரமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

நிகழ்வில் பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார், பொருளாளர் SK சீனிவாசன், இணை செயலாளர் தேவி உதயகுமார், ஒருங்கிணைப்பாளர் சேந்தை கோபாலகிருஷ்ணன், வெண்ணந்தூர் சங்க நிர்வாகிகள் அமுல்ராஜ், R.K.பழனிவேல், கனகாம்பரம் மற்றும் ரெட்கிராஸ் செயலாளர் இராஜேஷ் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்